உடுமலை: உடுமலை அருகே 25 போட்டிகளில் வெற்றி வாகை சூடிய காங்கயம் இனக் காளை ரூ.30 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாயிகள், ரேக்ளா பந்தயத்துக்காக அதிகளவில் காங்கயம் இன காளைகளை வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் உடுமலை அருகே உள்ள மருள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரி வீரராகவன் என்பவர் காங்கயம் இன காளைகள் வளர்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள நெகமம் செட்டிக்காபாளையத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் இவரது 3 வயது காங்கயம் மயிலை காளை குறைந்த நேரத்தில் இலக்கை கடந்து முதல் பரிசு வென்றது. இந்த காளையை உச்சபட்சமாக ரூ.30 லட்சத்துக்கு ஹரி வீரராகவன் விற்பனை செய்துள்ளார்.