லண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் கலவைதான் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில் என இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர். அவர் என்ன சொல்லியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) அன்று தொடங்குகிறது. முதல் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி என அடுத்தடுத்து இரண்டு முக்கிய வீரர்கள் ஓய்வு அறிவித்த நிலையில் ஷுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.