புதுடெல்லி: வளர்ச்சி அடைந்த இந்தியாவை அடைவதில் குடிமைப் பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று குடிமைப் பணிகள் தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
17-வது குடிமைப் பணிகள் தினத்தையொட்டி புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், குடிமைப்பணி அதிகாரிகளிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பொது நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்குப் பிரதமர் விருதுகளை வழங்கினார். பிரதமர் தனது உரையில், "அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.