மதுரை: ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை வாழ்விடப் பறவைகளின் இனப்பெருக்க காலமும், வெளிநாட்டு பறவைகளின் வலசை காலமும் உள்ளது. இக்கால இடைவெளியில் அரசு மற்றும் பல்வேறு தன்னார் வல, ஆய்வு நிறுவனங்கள் பறவைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகின்றன. மாவட்டந்தோறும் சமீபத்தில் கல்வி, தொழில் நிறுவனங்களிலும் வளாக பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
இதன்மூலம் பெறப்படும் பறவைகளின் எண்ணிக்கை தரவுகளை கடந்த காலத்துடன் ஒப்பிட்டு, உயிரினங்கள் வாழும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு இருக்கிறதா? அல்லது பாழடிக்கப்பட்டுள்ளதா? நகர்ப்புற விரிவாக்கம், வளர்ச்சி நோக்கில் சுற்றுச்சூழல் சிதைந்துள்ளதா என அறிய முடிகிறது.