சென்னை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது சுற்றுச்சூழல் அழகையும், தூய்மையையும் பாதுகாக்கபொதுமக்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தவை விநாயகர் சதுர்த்திக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய, நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களையே பூச வேண்டும். அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும்.