புளோரிடா: சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாத காலமாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் (க்ரூ-10) விண்கலன் வெற்றிகரமாக புறப்பட்டுள்ளது.
டிராகன் விண்கலனில் தற்போது சர்வதேச விண்வெளி மையத்துக்கு புறப்பட்டுள்ள விண்வெளி வீரர்களிடம் தங்களது பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பூமி திரும்புகின்றனர். சனிக்கிழமை பின்னிரவு டிராகன் விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்தை அடையும் என தகவல். அடுத்த வாரம் இதே விண்கலனில் அவர்கள் பூமி திரும்ப உள்ளனர். புளோரிடா கடலில் அவர்களது விண்கலன் ஸ்பிளாஷ் டவுனாக உள்ளது.