மதுரை: குமரி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் மனைப்பிரிவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில் நகர் ஊரமைப்பு இயக்குநர் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அருள்ஞானபுரத்தைச் சேர்ந்த தினகரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “புத்தேரி, இறச்சகுளம் வருவாய் கிராமங்களில் விவசாய நிலங்கள் அரசு விதிமுறைகளை மீறி மனைபிரிவுகளாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த மனை பிரிவுகளுக்காக விவசாய நிலங்கள், அரசு புறம்போக்கு பாசன கிளைக் கால்வாய்கள் அழிக்கப்பட்டு, அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாமலும் வேலி அமைத்து சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது.