சில நாட்களாக பாகிஸ்தானிடம் இருந்து வரும் தடித்த வார்த்தைகள் இந்திய அரசும், மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் முக்கிய பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அமைதியான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால், இந்த அமைதியான சூழ்நிலையை கெடுக்கும் வகையில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து வெளிவரும் விஷம் தோய்ந்த வார்த்தைகள் அனைவரையும் கோபமடையச் செய்யும் வகையில் உள்ளது.