சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல், டெல்லி, வாராணசி, பெங்களூரு, ஹவுரா சந்திப்பு, மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம் உள்ளிட்ட 60 ரயில் நிலையங்களில் இருக்கை உறுதியான பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காத்திருப்போர் பட்டியல் பயணச்சீட்டு வைத்திருப்போர், பயணச்சீட்டு இல்லாதோர் வெளியிலுள்ள காத்திருப்போர் அறையில் மட்டுமே அமரமுடியும் என்ற ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு பாராட்டுக்குரியது.
டெல்லி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் கும்பமேளாவுக்கு செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான பயணிகள் முண்டியடித்ததில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து ரயில்வே நிர்வாகம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.