துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது.
8 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது.