சென்னையில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகள், தற்போது வாடகை தாய்மார்கள் தங்கும் வீடுகளாக மாறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களால் குடியிருப்புவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
படிப்பதற்காகவும், வேலைக்காகவும் ஏராளமானோர் சென்னை வருகின்றனர். இவர்களுக்காகவே ஏராளமான விடுதிகளும் இயங்கி வருகின்றன. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, மேத்தா நகர், அண்ணா நெடும்பாதை, கில் நகர் உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதி பெற்று இந்த விடுதிகளை தனியார்கள் நடத்தி வருகின்றனர்.