புதுடெல்லி: நாடு முழுவதும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட பல நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் தமிழ் குடும்பத்தின் குழந்தைகள் தமிழ் வழிக் கல்வி பெறுகின்றனர்.
சில மாநிலங்களில் தனியாக நிர்வாகிக்கப்படும் தமிழ்வழிக் கல்விக்கான பள்ளிகளும் 12 -ம் வகுப்பு வரை நடைபெறுகின்றன. இவற்றுக்கு 1 முதல் 12 வகுப்புகள் வரை தேவைப்படும் தமிழ்நாட்டு அரசு பாட நூல்கள் இலவசமாகக் கிடைத்து வந்தன. இதன் விநியோகத்தை நடப்பாண்டு முதல் தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசின் பணநெருக்கடி காரணமாகக் கூறப்படுகிறது.