சென்னை: உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுவில் தனது சொத்துகள் தொடர்பான முழு விவரங்களையும் தெரிவிக்காமல் மறைத்த மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்காத திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவாரூரைச் சேர்ந்த சரத்பாபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சா. பாப்பா சுப்ரமணியன் 2-வது வார்டுக்கான மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக வெற்றி பெற்றார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துகள் தொடர்பான முழு விவரங்களையும் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.