மதுரை: ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ என்ற கோட்பாடு அனைத்து வழக்குக்கும் பொருந்தாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் காடனேரி கிராம நிர்வாக அலுவலர் (ஓய்வு) சி.மார்க்கண்டன், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நான் 1983-ல் கிராம தலையாரியாக பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் பணிபுரிந்து கிராம நிர்வாக அலுவலராக பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். எனது உண்மையான பிறந்த தேதி 23.3.1961 ஆகும். ஆனால் நான் பணியில் சேர்ந்த போது எனது பிறந்த தேதி 28.1.1958 என தவறுதலாக பதிவு செய்யப்பட்டது.