திருப்பூர்: வேலை தேடி திருப்பூருக்கு குடும்பத்துடன் ரயிலில் வந்த ஒடிசாவைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிஹாரைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 17-ம் தேதி திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை தேடி ஒடிசா மாநிலத்தில் இருந்து 27 வயதுடைய பெண் தனது கணவர் மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் ரயிலில் திருப்பூர் வந்தார். திருப்பூரில் வேலை தேடி அலைந்துள்ளனர். ஆனால் எங்குமே வேலை கிடைக்காத நிலையில் புஷ்பா ரயில்வே சந்திப்பு அருகே நின்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது நதிம் (24), முகமது டேனிஸ் (25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தங்களின்பனியன் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை எனக் கூறி, லட்சுமி நகர் பகுதியில் உள்ள அவர்கள் தங்கியிருந்த அறைக்கு இளம் பெண் உள்பட 3 பேரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.