துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
துபாயில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 49.4 ஓவர்களில் 228 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. சவுமியா சர்க்கார் 0, மெஹிதி ஹசன் 5 ரன்களில் முகமது ஷமி பந்திலும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ரன் ஏதும் எடுக்காமல் ஹர்ஷித் ராணா பந்திலும் ஆட்டமிழந்தனர்.