ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் மத்திய பகுதியில் அமைந்துள்ள ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனத்தில் பள்ளிக் கல்வியை முறையாக முடிக்காத மாணவர்களை உயர்கல்விக்கு தயார்படுத்துகின்றனர். இந்த பள்ளியில் நுழைந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்த நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் நான்கு பேர் பலத்தகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னால் பயங்கரவாத நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை என்பதையும் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
The post ஸ்வீடனில் கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி..! appeared first on Dinakaran.