பெங்களூரு: கர்நாடகாவில் கதக் அருகே ஹோலி கொண்டாட்டத்தின்போது பள்ளி மாணவிகள் 7 பேர் மீது மர்ம கும்பல் ரசாயனம் கலந்த வண்ணப்பொடியை வீசினர். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் லக் ஷ்மேஷ்வர் நகரில் நேற்று ஹோலி பண்டிகையின்போது, பள்ளி மாணவிகள் 7 பேர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது 3 பைக்குகளில் வந்த இளைஞர் கும்பல் அந்த மாணவிகள் மீது ரசாயனம் கலந்த வண்ணப் பொடிகளை வீசினர். இதனால் 7 பேருக்கும் மூச்சு திணறல், இருமல், நெஞ்சு வலி ஏற்பட்டது.