புதுடெல்லி: நாடு முழுவதும் ஹோலி பண் டிகை இன்று தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து சில நகரங்களில் பொதுமக்கள் முக் கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்றும் தங்கள் ஹோலி நாள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின் றனர். இந்த நேரங்களில் வழியில் அமைந்த மசூதிகள் மீது வண் ணக் கலவைகள் படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதை யடுத்து உத்தர பிரதேச மாநிலத் தில் கவலரம் ஏற்படாமல் தடுக்க, முதல் முறையாக அலிகர், பரேலி, சம்பல் நகரங்களில் உள்ள சில மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டுள்ளன.
ஹோலி பண்டிகையின் போது ஷாஜகான்பூரில் உள்ள மசூதி களை தார்பாய்களால் மூடும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. இப்பகுதியில்ஆட்சி செய்த நவாப் கடும் அடக்குமுறையை கையாண்டதால் பொதுமக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அதன்படி ஹோலி பண்டிகையிலும் படே நவாப் (பெரிய நவாப்), சோடே நவாப் (சிறிய நவாப்) என இருவரை பெயரளவில் தேர்வு செய்து எருமை மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக அழைத்து செல்கின்றனர். அப்போது இரு புறமும் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் காலணிகளை வீசுவது வீசுவது வழக்கம்.