பியூனஸ் அய்ரஸ்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றுள்ளது. ஏற்கெனவே, செவ்வாய்க்கிழமை அன்று உருகுவே உடனான ஆட்டத்தை பொலிவியா 0-0 என சமன் செய்த காரணத்தால் அர்ஜென்டினா தகுதி பெற்றிருந்த நிலையில் தகுதி சுற்றில் பிரேசில் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஜூலியன் அல்வாரெஸ், என்ஸோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் மற்றும் கியுலியானோ ஆகியோர் அர்ஜென்டினா அணிக்காக கோல் பதிவு செய்தனர். ஆட்டம் தொடங்கியது முதலே அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது. ஆறாவது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரெஸ் முதல் கோலை பதிவு செய்தார். 12-வது நிமிடத்தில் பெர்னாண்டஸ் தன் அணிக்காக இரண்டாவது கோலை பதிவு செய்தார்.