அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் பயணம் செய்த பெரும்பாலான காப்பீட்டுதாரரும், அவர் நியமித்த நாமினியும் ஒருசேர உயிரிழந்துள்ளனர். இதனால், இழப்பீட்டு தொகையை வழங்குவதில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
விமானத்தில் பயணம் செய்த 241 பேர், கட்டிடத்துக்குள் இருந்த 29 பேர் என மொத்தம் 270 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் குடும்பத்துடன் லண்டன் சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.