
புதுடெல்லி: கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் தந்தை, தற்போதைய விசாரணை பாரபட்சமானது என்றும், நீதித்துறை மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளாகி 241 பயணிகள் உட்பட 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா போயிங் விமானத்தின் விமானியாக இருந்த மறைந்த கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை, விபத்து குறித்து நீதித்துறை மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) உடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தில் (AAIB) நடந்து வரும் விசாரணையை அவர் முடிக்கக் கோரியுள்ளார்.

