புதுடெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடி மதிப்பில் 12 விவிஐபி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசு, கடந்த 2010, பிப்ரவரி 8-ம் தேதி கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தால், அரசுக்கு சுமார் ரூ.2,666 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஏற்பட இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கைது செய்யப்பட்டார். அதுமுதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.