கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடந்த அகில இந்திய ஹாக்கி போட்டியில் புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி பெற்று சாம்பியன் ஷிப்பை தட்டிச்சென்றது.
கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை, கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14-வது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடந்த 3, 4-வது இடங்களுக்கான போட்டியில் புதுடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் மோதின. இதில், 4 – 2 என்ற கோல் கணக்கில் புதுடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது.