டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. பேட்டிங் இறங்கிய மும்பை அணியின் ரோஹித் சர்மா, ரையான் ரிக்கல்டன் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ரோஹித் 18 ரன்களுடன் வெளியேறவே, ரிக்கல்டன் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும், திலக் வர்மா 59 ரன்களும் விளாசி அணியின் நம்பிக்கையை மீட்டனர்.