புதுடெல்லி: ‘ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் சும்மா அப்படியே அணியில் தொற்றிக் கொண்டு 2027 உலகக் கோப்பை வரை நீடிக்கலாம் என்று ஓட்டக் கூடாது’ என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஆஸ்திரேலியாவில் தங்கள் கடைசி தொடரை ஆடி வருகின்றனர். அன்று பவுன்ஸ் பிட்சில் பெர்த்தில் இருவருமே சொதப்பி ஆட்டமிழந்தனர். அடிலெய்டில் இன்று 2-வது போட்டியில் நிச்சயம் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய இருவருமே விரும்புவார்கள்.