
2021-ல் மாநிலத் தலைவரான பின்னர் தமிழகத்தில் எப்போதும் பாஜகவை லைம்லைட்டில் வைத்திருந்தார் அண்ணாமலை. நயினார் நாகேந்திரன் தலைவரான பின்னர் பாஜக சுணக்கமாகி விட்டதாக ஒரு தரப்பு பேச ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலை – நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளை ஒப்பிட்டு எழுந்துள்ள பிரளயம்தான் பாஜகவில் இப்போது ஹாட் டாபிக்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பாஜகவின் மாநிலத் தலைவரான பின்னர் தமிழகத்தில் தினம் தினமும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றபடி இருந்தார். தடாலடி பேச்சுகள், திமுக மீதான கடும் எதிர்ப்பு ஆகியவை இவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. அண்ணாமலையின் அதிரடியால் பாஜகவில் புதியவர்கள் அதிகம் இணைந்தார்கள் என அவரின் ஆதரவாளர்கள் புள்ளிவிவரங்களையும் அடுக்கினர்.

