மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-ம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திமுக சார்பில் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட அமைதி பேரணி, 20 நிமிடத்தில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தை அடைந்தது. அங்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.