புதுச்சேரி: புதுச்சேரியில் லஞ்ச புகார்கள் அதிகரித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தருவதைத் தவிர்த்து சிபிஐக்கு அதிகளவில் புகார்கள் தரப்படுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரியில் லஞ்ச புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளது. ஆனால் பலரும் இங்கு புகார் தருவது இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாடுகளும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. இதனால் பலரும் சென்னை சிபிஐ கிளையில் புகார் தந்து தொடர்ந்து நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.