புதுடெல்லி: சுயசார்பு கொண்ட அதிகாரம் பெற்ற பெண்களின் பலத்தால் மட்டுமே வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க முடியும் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு, வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான மகளிர் சக்தி என்ற கருப்பொருளில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாநாட்டை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் உரை நிகழ்த்திய முர்மு, "சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.