தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடைபெறுவது போன்ற தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் 2012-ல் அதிமுக ஆட்சியில்தான் அதிகபட்சமாக 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தமிழகத்தில் நடந்து வரும் கொலை சம்பவங்கள் குறித்து குற்றம்சாட்டி பேசினார். இதனால், கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அவர் தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.