கோபி: “தேர்தல் வெற்றிக்கு, தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு மறப்போம் மன்னிப்போம் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்ற வேண்டும். அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை அரவணைக்க வேண்டும்.” என்று கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செப்.5-ம் தேதி மனம் திறந்து பேசுவேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் கூறியிருந்தார். இது, அதிமுகவிலும், தமிழக அரசியல் களத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் திமுகவில் இணையப் போகிறார் என்றார் ஊகங்கள் எல்லாம் உதயமானது. இந்நிலையில், இது தொடர்பாக கோபியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.