குன்னம்: “திமுகவினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் மூலம் உறுப்பினர்களைச் சேர்க்கிறார்கள். யாரும் உறுப்பினராக சேரவில்லை என்றால், உரிமைத் தொகை நிறுத்துவார்களாம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட காலத்துக்கும் சேர்த்து கொடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார சுற்றுப் பயணத்தை அரியலூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாலையில் குன்னம் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் மத்தியில் பேசியது: “குன்னம் தொகுதியின் அத்தனை வாக்காளர்களும் குழுமி, இந்த பூமியே அதிரும் அளவுக்கு கடல் போல் காட்சியளிக்கிறது.