மதுரை: அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமான மூலம் இன்று மதுரை வந்தடைந்தார். பின்னர் அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக என்றைக்குமே மறைந்த தியாகிகள், பெரியவர்களை வணங்கியும், போற்றியும் வந்துள்ளது. அந்த வகையில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மரியாதை செலுத்த செல்கிறோம்.