புதுச்சேரி: “வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸை, பாஜக விழுங்கிவிடும். என்.ஆர்.காங்கிரஸ் காணாமல் போய்விடும். தமிழகத்தில் அதிமுக உடைக்கப்படும், பலவீனமாக்கப்படும். புதுச்சேரியிலும் அதிமுக பலவீனமாக்கப்படும். பாஜக பிரதான எதிர்கட்சியாக வர வேண்டும் என்று வேலை செய்கிறது” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் வக்பு வாரிய புதிய சட்டத் திருத்தத்தைக் கண்டித்து அண்ணா சிலை அருகே இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை உறுதி செய்திருக்கிறார். எந்த காலத்திலேயேயும் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பலமுறை கூறினார்.