பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி தங்களது முதல் வெற்றியை ருசித்ததற்கு முக்கிய காரணம், ஜாஷ் ஹேசில்வுட்டின் இரண்டு ஓவர்கள். அதிலும் குறிப்பாக, அந்த 19-வது ஓவர் நிச்சயம் டி20 கிரிக்கெட்டில் அனைத்துப் பவுலர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களைக் கொண்டது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துருவ் ஜுரெல், ஷுபம் துபே புவனேஷ்வர் குமார் ஓவரை துவைத்து எடுத்து 22 ரன்களை விளாசிய தருணம், ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் பக்கம் சென்றுவிட்டது. ஆர்சிபி ரசிகர்கள், ‘அடப் போடா மறுபடியும் தோல்வியா?’ என்று சோர்வடைந்து போயினர். ஏனெனில் 12 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்குத் தேவை வெறும் 18 ரன்களே.