புதுடெல்லி: அந்நிய நேரடி முதலீட்டு மேலாண்மை சட்ட விதிகளை மீறியதாக பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை ரூ.3.44 கோடி அபராதம் விதித்துள்ளது.
குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை பிபிசி நிறுவனம் தயாரித்தது. இதற்கு மத்திய அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை இந்தியாவில் ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிபிசி இந்தியா நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.