சென்னை: வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவதில் இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும், அதிநவீன கருவிகள் மூலமாக அந்நிய மரங்கள் அகற்றப்படுகிறது என்றும் ஆதாரப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்த வனத்துறைக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் அடர்ந்து பரந்து விரிந்துள்ள வனப்பகுதிகளில் நாட்டு மரங்களையும், மண் மற்றும் நீர் வளத்தையும் பாதிக்கும் வகையில் ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்ற வேண்டும் என ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் வனத்துறைக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யூக்கலிப்டஸ் போன்ற அந்நிய மரங்களை அகற்றக்கோரி சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.