சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் வரும் ஆக. 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட 6 முக்கிய நாட்களில் தமிழகத்தில் உள்ள 12,482 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும். இக்கூட்டங்களின் வாயிலாக, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.