சென்னை: சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் பிரபல திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரை அடுத்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், அத்திரையரங்கில் நேற்று சோதனையிட்டனர்.
அப்போது திரையரங்கில் காலாவதியான உணவு பொருட்கள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது: இந்த காலாவதியான குளிர்பானங்கள், பாப்கார்ன்கள் கேரளாவில் இருந்து விநியோகம் செய்யப்பட்டுள்ளன.