சென்னை: “மத்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது குடிமக்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வகையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று தாக்கல் செய்திருக்கும் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், தொழில்முனைவோர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் பொருளாதார நிலைத்தன்மையையும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருப்பது அனைத்து வகையிலும் வரவேற்புக்குரியது.