கொல்கத்தா: மாநிலத்தில் அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், வன்முறை போராட்டங்கள் மூலம் பொறியில் சிக்காதீர்கள் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் துலியன் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதையடுத்து, இந்தப் போராட்டம் இரு தரப்பினரிடையேயான மோதலாக உருவெடுத்தது. மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.