ஈரோடு: “2008-ல் பிரபாகரன் உபதேசம் கூறிய பின்னர் 2010-ம் ஆண்டு பெரியார், எம்ஜிஆர் கட்அவுட்டுகளை மேடையிலே வைத்து மாபெரும் விழா எடுத்தது ஏன்?” என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முதல்வர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி ஈரோட்டில் உள்ள பெரியார் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் 2008-ல் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சந்தித்ததாகவும், அப்போது அவர் வழங்கிய உபதேசத்தால், திராவிடர்கள் திருடர்கள் என தெரிய வந்ததாகவும், அதுவரை தெரியாமல் போனதாகவும் மேடைகளில் பேசி வருகிறார்.