ஜம்மு: தெற்கு காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. ஜம்மு, பகவதி நகரில் இருந்து பஹல்காம் அடிவார முகாம் நோக்கி அமர்நாத் பக்தர்களுடன் நேற்று காலையில் பேருந்துகள் புறப்பட்டன.
ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சந்தர்கோட் லாங்கர் பகுதியில் ஒரு பேருந்தின் பிரேக் திடீரென பழுதாகி 4 பேருந்துகள் மீது மோதியது. இதில் 36 பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மாற்று வாகனங்களில் யாத்திரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.