புதுடெல்லி: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என்று உத்தரவிட கோரியும் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.