ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு அண்மையில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கையை சிபிஐ எடுத்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் குற்றங்கள் செய்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை மீட்டு விசாரணைக்கு அழைத்து வர சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி அண்மையில் தப்பியோடிய குற்றவாளிகள் மூன்று பேரை சிபிஐ இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது. சுஹைல் பஷீர், தவுபிக் நஜிர் கான், ஆதித்யா ஜெயின் ஆகிய 3 பேரையும் சிபிஐ அழைத்து வந்துள்ளது. இவர்களில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி, மிரட்டி பணம் பறிப்பவர்களும் அடங்குவர்.