
புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. 2026-ல் 2.2 மில்லியன் டன் எல்பிஜி எரிவாயுவை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் நிகழ்வு!. உலகின் மிகப் பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் எல்பிஜி சந்தைகளில் ஒன்றான இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து அவற்றை இறக்குமதி செய்ய உள்ளது.

