புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தைகளை ஏமாற்றி ரூ.36,500 கோடி வருவாய் ஈட்டியதாக எழுந்த புகாரையடுத்து அந்த நிறுவனத்தின் மீது செபி முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் அதன் துணை நிறுவனங்களை இந்திய பங்குச் சந்தையில் இருந்து செபி தடை செய்துள்ளது. மேலும், சட்டவிரோதமாக ஈட்டியதாக கூறப்படும் ரூ.4,843 கோடியை திரும்பச் செலுத்தவும் செபி உத்தரவிட்டுள்ளது.