வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள யூதர்கள் அருங்காட்சியகத்தில் யூதர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதரக அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு அனைவரும் அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வந்தனர்.
அப்போது இஸ்ரேல் தூதரக அதிகாரிகள், ஊழியர்களும் வெளியே வந்து வீட்டுக்குச் செல்ல ஆயத்தமாகி நின்றனர். அப்போது அருங்காட்சியகத்துக்கு வெளியே நின்ற மர்ம நபர் ஒருவர் தூதரக ஊழியர்களை நோக்கி ஓடிச் சென்று திடீரென்று குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே இஸ்ரேலிய தூதரக பெண் ஊழியர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இவர்கள் இருவருமே இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் ஆவர்.