வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற இனி ராணுவ விமானம் பயன்படுத்தப்பட மாட்டாது என்று அமெரிக்கா அதிரடியாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிபராக கடந்த ஜன., மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இதன் பிறகு, அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான சி 17 விமானத்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். சட்டவிரோதமாக குடியேறினால், அதனை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில், ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக குடியேறினால், அதனை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில், ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. கடைசியாக சட்டவிரோதமாக குடியேறியவர்களை மார்ச் 1ம் தேதி ராணுவ விமானம் மூலம் அவர்களது நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பியது. இந்த நிலையில், சட்டவிரோதக் குடியேறிகளை இனிமேல் ராணுவ விமானத்தில் ஏற்றி அனுப்புவதில்லை என்று அமெரிக்க அரசு முடிவு செய்தது.
ராணுவ விமானத்தை பயன்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவு ஆவதால் பயணிகள் விமானம் மூலம் அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவிலிருந்து குவாத்தமாலாவுக்கு ராணுவ விமானத்தில் ஒருவரை அழைத்துச் செல்ல ரூ.4,07,374 செலவு ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவில் இருந்து பயணிகள் விமானம் மூலம் குவாத்தமாலா செல்ல ஒரு நபருக்கு ரூ.74,330தான் செலவு ஆகிறது. பயணிகள் விமானத்தைவிட நபர் ஒருவருக்கு 5 மடங்கு அதிக செலவு ஆவதை தடுக்கவே ராணுவ விமானத்தை தவிர்க்க முடிவு செய்துள்ளது.
The post அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற இனி ராணுவ விமானம் பயன்படுத்தப்பட மாட்டாது : அதிபர் ட்ரம்ப் அதிரடி appeared first on Dinakaran.